For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்டிப்பட்டி முறைகேடுகள்: தேர்தல் கமிஷன் ரகசிய விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நடந்தது குறித்து தேர்தல் கமிஷன் மீண்டும் ரகசியமாய்விசாரணை நடத்தியுள்ளது.

இடைத் தேர்தல் நடக்கவுள்ள இந்தத் தொகுதியில் அதிமுகவினர் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்களைசேர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்ற இரு தொகுதிகளில் இதே குற்றச்சாட்டு காரணமாக தேர்தல்நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன்அறிவித்துவிட்டது.

அதே நேரத்தில் அங்கு முறைகேடுகள் நடந்துள்ளதை தேர்தல் கமிஷனே ஒப்புக் கொண்டுள்ளது.

ஜெயலலிதா போட்டியிடுவதால் தான் தேர்தல் கமிஷன் முறைகேடுகளையும் மீறி தேர்தல் நடத்துவஞூ இவ்வாறுநடந்துகொள்வதாக பரவலாக புகார் எழுந்துள்ளது.

இந்தத் தேர்தலை நிறுத்தக் கோரி திமுக தலைவர் கருணாநிதி ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதினார். இப்போது இத்தேர்தலை நிறுத்தக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் வைகை சேகர் வழக்கு தாக்கல்செய்துள்ளார்.

இந்த வழக்குக்கு நீதிமன்றத்தில் உரிய பதில் அளிக்கும் வகையில் ஆண்டிப்பட்டி வாக்காளர் பட்டியல் முறைகேடுகுறித்து தேர்தல் கமிஷன் மீண்டும் விசாரணை நடத்தியது.

ஆண்டிப்பட்டியில் முகாமிட்டுள்ள மத்திய தேர்தல் பார்வையாளர் ஆனந்த் பிரகாஷ், பெரியகுளம் துணைகலெக்டர் விஜயராஜ்குமார் மற்றும் பல அதிகாரிகள் ஆண்டிப்பட்டியில் அடங்கியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும்சென்று பல வீடுகளில் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தனர்.

இந்த விவரங்களை சேகரித்துக் கொண்டு அதிகாரிகள் உடனடிாக டெல்லி விரைந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X