இலங்கை போர் நிறுத்த நீடிப்பு: அமெரிக்கா வரவேற்பு
வாஷிங்டன்:
இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்ததை அமெரிக்க அரசுவரவேற்றுள்ளது.
மேலும் இலங்கை அரசு இந்த போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த நடவடிக்கைகளை அமெரிக்க அரசு வரவேற்றுள்ளது.
இது பற்றி அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோ-ஆனிப்ரோகபோவிக்ஸ் நேற்று வாஷிங்டனில் கூறியதாவது:
மேலும் ஒரு மாதத்திற்கு போர் நிறுத்தத்தை நீடித்திருக்கும் இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும்அமெரிக்க அரசு பாராட்டுகிறது.
மேலும் 1993லிருந்து கைது செய்து வைத்திருந்த இலங்கை ராணுவத்தினர் 10 பேரை விடுதலைப்புலிகள்விடுவித்திருப்பது வரவேற்புக்குறியது.
சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிறுக்கும் நார்வே தூதுக்குழுவினருக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவுஅளிக்கும் என்று அவர் கூறினார்.
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் அடுத்த வாரத்தில் இலங்கைச் செல்லவிருக்கிறார். அவர்இலங்கை அமைச்சர் மிலிண்டா மோரகோடா மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் கேபினெட் கமிட்டிஉறுப்பினர்களையும் சந்திப்பார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications