வீரப்பனை பார்த்த கிராமத்தினர்: அதிரடிப் படை விரைந்தது
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்:
பவானிசாகர், சிறுமுகை மற்றும் மாயாறு காட்டுப் பகுதிகளில் வீரப்பனைக் கண்டதாக சிலர் தகவல்கொடுத்ததையடுத்து பெரும் அளவிலான அதிரடிப் படையினர் அப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் வீரப்பன் தனது ஆட்களுடன் சென்றதை சில வனவாசிகள் பார்த்துள்ளனர். இதையடுத்துஅதிரடிப் படையினரிடம் அந்த மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்தியூர் முகாமில் இருந்து நூற்றுக்கணக்கான போலீசார் இந்த இடங்களுக்குச் சென்றனர். இந்தப்பகுதியில் உள்ள கிராம மக்களிடமும், ஆடு மாடு மேய்ப்பவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அதிரடிப் படை தங்கராஜ் தலைமையில் ஒரு குழு மயாறு பகுதியில் முகாமிட்டுள்ளது. தேடுதல் வேட்டை மிகத்தீவிரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications