குடியரசு தின விழாவை புறக்கணித்த ஸ்டாலின்: "கராத்தே" ஆவேசம்
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் ஸ்டாலின் குடியரசு தின விழாவைப் புறக்கணித்தது தேச விரோத செயல் என்றுதுணை மேயரான "கராத்தே" தியாகராஜன் கூறினார்.
இது தொடர்பாக தியாகராஜன் நேற்று (திங்கட்கிழமை) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சி ஆணையரின் அனுமதியோடு மாநகராட்சி கொடி, முத்திரையுடன் காரில் நான் செல்வதை மரபு மீறல்என்று ஸ்டாலின் கூறுகிறார்.
மேலும், அவருக்கு மாநகராட்சியால் கொடுக்கப்பட்ட 2 கார்களைப் பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளதாகக்கூறியுள்ளார். ஆனால், அந்த கார்கள் அவரது வீட்டுக்கு காய்கறிகள் வாங்க பயன்படுகிறது என்பதை அப்பகுதிமக்கள் நன்கு அறிவார்கள்.
கடந்த 26ம் தேதி சென்னை கடற்கரை சாலையில் நடந்த குடியரசு தின விழாவுக்கு வருகை தந்த முதல்வர் மற்றும்கவர்னரை மேயர் தான் முறைப்படி வரவேற்றிருக்க வேண்டும்.
ஆனால், அந்த விழாவையே புறக்கணித்த ஸ்டாலினுக்கு மரபுகளைப் பற்றி பேச யோக்யதை கிடையாது. அவரதுதந்தையான கருணாநிதி முதல்வராக இருந்தபோது குடியரசு விழாவை இவர் புறக்கணித்தது உண்டா? எதிர்க்கட்சிஆட்சியில் இருந்தால் விழாவை புறக்கணிப்பதுதான் மரபா?
ஆனாலும் அதே நாளில் சென்னை மாநகராட்சியில் மேயர் ஸ்டாலின் கொடியேற்றிய போது நான் மற்றும் அதிமுககவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டு மேயருக்கு உரிய மரியாதையை அளித்தோம் என்று தியாகராஜன்கூறினார்.












Click it and Unblock the Notifications