கள்ள ஓட்டைத் தடுக்க தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கள்ள ஓட்டு போடுவதை தடுக்க இடது கை விரலில் 2 முறை அழியாத மை வைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன்அறிவித்துள்ளது.

தேர்தல் வாக்களிக்கும்போது, வாக்காளர்கள் ஓட்டுப் போட்டதற்கு அடையாளமாக அவர்களுடைய இடது கைஆள்காட்டி விரலில் கருப்பு நிற மையை அதிகாரிகள் வைப்பார்கள்.

ஆனால் இந்த மை அழிந்து விட்டதாகவும், இதனால் சில இடங்களில் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டுதில்லுமுல்லுகள் நடந்ததாகவும் தேர்தலின்போது அரசியல் கட்சியினர் அதிகாரிகளிடம் புகார் செய்வது வழக்கம்.
எனவே இனிமேல் தேர்தலின்போது வாக்காளர்களின் இடது ஆள்காட்டி விரலில் 2 முறை அழியாத மைவைக்கும்படி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முதலில் வைக்கப்பட்ட மை காய்ந்த பிறகே 2வது முறை மையை வைக்க வேண்டும். முதலில் வைத்த மை காயும்வரை வாக்குச் சீட்டில் வாக்காளர்களிடம் கையெழுத்து அல்லது கைநாட்டு வாங்கும் பணியில் ஈடுபடலாம்.அதற்குள் அந்த மை காய்ந்துவிடும்.

பின்னர் 2வது முறையாக அதே இடத்திலேயே மையை வைக்க வேண்டும். இந்த மை ஆள்காட்டி விரல் நகத்தின்சதைப் பகுதிக்குள் செல்லும் வகையில் மையிட வேண்டும்.

இது தொடர்பாக அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உள்ள தலைமை தேர்தல்அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் விரிவான ஆலோசனைகளுடன் கூடிய உத்தரவை அனுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+