முஸ்லீம்கள் சொந்த ஊர் திரும்ப புலிகள் அனுமதி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

வடக்கு இலங்கையில் உள்ள தங்களுடைய சொந்த வீடுகளுக்கு முஸ்லீம்கள் திரும்ப விடுதலைப் புலிகள்அனுமதியளித்துள்ளனர்.

கடந்த 1990ம் ஆண்டு வடக்கு இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அப்போது ஏற்பட்டபயங்கரக் கலவரத்தில் ஒரு முஸ்லீம் போலீசும் மற்றொரு முஸ்லீமும் படுகொலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து 80,000க்கும் அதிகமான முஸ்லீம்கள் வடக்கு இலங்கையைக் காலி செய்துவிட்டு தெற்கில் உள்ளஅகதிகள் முகாம்களைச் சென்றடைந்தனர்.

இந்நிலையில் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான ராப் ஹக்கீம் கடந்த 2வாரங்களுக்கு முன் விடுதலைப் புலிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முடித்துக் கொள்ள வேண்டுமென்றும் 1990ல் வடக்குஇலங்கையிலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லீம்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடத்திலேயே வாழஅனுமதிக்க வேண்டும் என்றும் ஹக்கீம் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேலும் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பிரச்சனைகளைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்என்றும் ஹக்கீம் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் வன்னி பகுதி சீரமைப்பிற்கான அமைச்சர் நூர்தீன் மசூரை விடுதலைப் புலிகளின் முக்கியத்தலைவர்களில் ஒருவரான பூவண்ணன் சமீபத்தில் சந்தித்தார்.

முஸ்லீம்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் வீடுகளுக்கும் திரும்ப விரும்புவதாக அப்போது நூர்தீன் தெரிவித்தார்.

வடக்கு இலங்கையில் மீண்டும் முஸ்லீம்கள் வந்து தங்குவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று பூவண்ணன்அப்போது நூர்தீனிடம் கூறினார்.

இதையடுத்து 1990ல் வெளியேறிய முஸ்லீம்கள் விரைவில் மீண்டும் வடக்கு இலங்கையில் உள்ள தங்கள் சொந்தவீடுகளுக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+