செக்ஸ் டாக்டர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
சென்னையைச் சேர்ந்த செக்ஸ் டாக்டர் பிரகாஷ் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை அடுத்த மாதம்5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கல்லூரிப் பெண்கள், நடிகைகள் உள்ளிட்டோரை வைத்து ஆபாசப் படங்கள் எடுத்து இன்டர்நெட் மூலம் விற்றதாகபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தன்னை ஜாமீனில் விடக் கோரி பிரகாஷ் சார்பில் சென்னை முதலாவது செஷன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல்செய்யப்பட்டுள்ளது. பிரகாஷ் தன் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் பிரபலமான மருத்துவர். பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் இருந்துள்ளேன். தினசரி 50 நோயாளிகளுக்குசிகிச்சை அளித்து வருகிறேன்.
தற்போது நான் கைது செய்யப்பட்டிருப்பதால் எனது நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7000க்கும்மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளேன்.
சமூகத்தில் கெளரவமான நிலையில் இருக்கும் என் மீது அவதூறான வழக்கு போடப்பட்டுள்ளது. என் மீதானபுகார்களுக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
எனது தந்தை இருதய நோயாளி. அவரை நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. நான் கைதாகி விட்டதால்அவர் ஆதரவின்றி உள்ளார்.
இந்த சூழ்நிலையில் என்னை ஜாமீனில் விடுதலை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அம்மனுவில் பிரகாஷ்கூறியிருந்தார்.
மனுவை நீதிபதி அசோக்குமார் வியாழக்கிழமை விசாரித்தார். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்தமனு தொடர்பாக பதில் தர அவகாசம் தேவை என்று கேட்டார்.
இதையடுத்து அடுத்த மாதம் 5ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி அசோக்குமார் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications