கடலூர், நாகை, புதுவையில் விரைவில் கடலோர காவற்படை மையங்கள்
சென்னை:
கடலூர், நாகப்பட்டினம் மற்றும் பாண்டிச்சேரி உள்பட 10 இடங்களில் விரைவில் கடலோர காவற்படை மையங்கள்செயல்படத் தொடங்கும் என்று கிழக்கு கடலோர காவற்படை தளபதியான கமோதர் ஆர்.எஸ். வாசன் கூறினார்.
கடலோர காவற்படை இன்று (வெள்ளிக்கிழமை) தன்னுடைய வெள்ளி விழாவைக் கொண்டாடிக்கொண்டிருப்பதையொட்டி, சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் கமோதர் வாசன் பேசியதாவது:
தமிழகத்தின் கடலூர், நாகப்பட்டினம், பாண்டிச்சேரி உள்பட 10 இடங்களில் கடலோர காவற்படையின் மையங்கள்விரைவில் செயல்படத் தொடங்கும்.
மேலும் கடத்தல் வேட்டைகளிலும் கடலோர காவற்படை சிறப்பாகப் பணியாற்றியுள்ளது. இதுவரை 99 கடத்தல்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 621 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.261.7 கோடி மதிப்புள்ளபொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னையில் கடலோர காவற்படையைச் சேர்ந்த மேலும் சில கப்பல்கள் விரைவில் பணியைத் தொடங்கவுள்ளனஎன்றார் வாசன்.
முன்னதாக கடலோர காவற்படையின் வெள்ளி விழாவை முன்னிட்டு சிறப்புத் தபால் தலை வெளியிடப்பட்டது.வட தமிழக போஸ்ட் மாஸ்டர் ஜெனரலான கே. நூர்ஜகான் இந்தச் சிறப்புத் தபால் தலையை வெளியிட, அதைவாசன் பெற்றுக் கொண்டார்.
கடலோர காவற்படையின் வெள்ளி விழாவை முன்னிட்டு இதன் 4 கப்பல்களைப் பொதுமக்கள் பார்வையிடஅனுமதியளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் இந்தக் கப்பல்களை இலவசமாகப்பார்வையிடலாம்












Click it and Unblock the Notifications