காஷ்மீரில் குண்டு வெடிப்பு: 5 குழந்தைகள் பலி
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ஒரு பஸ் நிலையத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட பயங்கரக் குண்டு வெடிப்பில் 5 குழந்தைகள்உள்பட 6 பேர் பலியாயினர்.
இச்சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்தனர்.
இதற்கிடையே நேற்று இரவு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகளைஇந்தியப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர்.
இதற்கிடையே பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய கடுமையான ஷெல்தாக்குதலில் அஜோத் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான குண்டுகளையும் சிறு ஏவுகணைகளையும் கொண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் இப்பகுதியில்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளும் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பலியாகியுள்ளன.
இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் எத்தனை பாகிஸ்தானியர்கொல்லப்பட்டனர் என்பது குறித்து தெரியவில்லை.












Click it and Unblock the Notifications