இந்தியாவைத் தாக்க முஷாரபுக்கு கமாண்டர்கள் யோசனை

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

இந்தியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபிடம் அந் நாட்டுராணுவ கமாண்டர்கள் கூறியுள்ளதாக பாகிஸ்தான் அப்ஸர்வர் நாளிதழ் கூறுகிறது.

எல்லையில் நிலவி வரும் பதற்றம் தொடர்பாக தனது மூத்த கமாண்டர்களுடன் ராவல்பிண்டியில் உள்ள ராணுவத்தலைமையகத்தில் முஷாரப் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது பாகிஸ்தானின் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டு வரும் இந்தியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் எனஅந்த கமாண்டர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த விஷயத்தில் பொறுமையைக் கடைபிடிப்பதை முஷாரப் கைவிடவேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

இருப்பினும் முஷாரபுக்கு அனைத்துக் கமாண்டர்களும் முழு ஆதரவு தெரிவித்தததாகவும் அந்த நாளிதழ்கூறுகிறது.

மாற்றம் தெரிகிறது:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் தலைநகரான முஷாபராபாத்தில் தான் பெரும்பாலான தீவிரவாதஅமைப்புகளின் தலைமை அலுவலகங்கள் இருந்தன. ஆயிரக்கண்ககான தீவிரவாதிகள் இந்த அலுவலகங்களில்ஆயுதங்கள் வந்து போவது மிகவும் சகஜம்.

ஆனால், இப்போது இந்த அலுவலகங்கள் எல்லாம் ஆராவாரமே இல்லாமல் காணப்படுகின்றன. இந்தியாதாக்கலாம் என்ற அச்சம் இருபதால் பல அமைப்புகள் தங்கள் அலுவலகங்களைக் காலி செய்துவிட்டு இந் நகருக்குவெளியே பதுங்க ஆரம்பித்துவிட்டன.

இந்தியாவுக்கு எதிரான போர் தொடுக்க தங்கள் அமைப்பில் சேருமாறு இந்த நகர் முழவதும் ஒவ்வொருஅமைப்பும் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது வழக்கம். அந்தப் போஸ்சர்களையும் இப்போதெல்லாம் பார்க்கமுடியவில்லை.

ஆனால், முஷாரபின் நடவடிக்கைகளுக்கோ, இந்தியா தாக்கலாம் என்பதாலோ இந்த நகரை விட்டுச் செல்லவில்லைஎன்றும் குளிர் மிக அதிகமாக இருப்பதால் தான் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் இந்தத்தீவிரவாதிகள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+