For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பின்லேடன்?

By Staff
Google Oneindia Tamil News

காபூல்:

ஒசாமா பின் லேடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருப்பதாக சி.ஐ.ஏ. கருதுகிறது.

இது குறித்து அந்த அமைப்பின் உயர் அதிகாரியொருவர் காபூலில் கூறுகையில், பின் லேடன் உயிருடன் இருந்தால்அவன் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் தான் இருக்க வேண்டும் என்றார்.

இந் நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் ஆப்கானிஸ்தான் துணை ராணுவஅமைச்சருமான அப்துல் ரஷீத் தோஸ்தம் இன்று டெல்லி வந்தார்.

அவர் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசுடன் பேச்சு நடத்தினார். தலிபான்களை முதலில் அடித்துவிரட்டியது தோஸ்தமின் படைகள் தான் என்பது நினைவுகூறத்தக்கது.

மஸார்-ஏ-ஷெரீப் நகரில் தான் தலிபான்களுக்கு முதல் அடி கிடைத்தது. இந்த நகரை அவர்களிடம் இருந்துகைப்பற்றி தலிபான்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர் தோஸ்தம். ஆனால், இவர் அடிக்கடி அணி மாறுவார் என்பதால்இவருக்கு முக்கியத்துவம் தர நார்த்தர்ன் அலையன்ஸ் படை மறுத்தது.

ஆனால், ஆப்கானிஸ்தானின் ராணுவத்தில் இவரது படையும் மிகப் பெரியது என்பதால் அவருக்கு துணைஅமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.

டெல்லியில் ஸ்டார் டிவிக்கு இவர் அளித்த பேட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு நடத்தித் தான் காஷ்மீர்பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். ராணுவ உடன்பாடு குறித்து பெர்னாண்டசுடன் நான் ஏதும் பேசவில்லை என்றார்.

இந் நிலையில் ஆப்கானிஸ்தானின் மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஹாஜி ரஹ்மான் மொகாக்கும் இந்தியாவந்துள்ளார். இவர் மத்திய அமைச்சர் அருண் ஷோரியுடன் பேச்சு நடத்தினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X