கருணாநிதியின் எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்க அதிமுக திட்டம்
சென்னை:
அடுத்த மாதம் நடக்கவுள்ள சட்டசபைக் கூட்டத்தொடரில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளாவிட்டால்அவரது எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்க அதிமுக முயலும் என்று தெரிகிறது.
அதிமுக ஆட்சிக்கு வந்தபின்னர் இதுவரை தமிழக சட்டசபை 2 முறை கூடியுள்ளது. ஆனால், இந்த இரு கூட்டத்தொடர்களிலும் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை.
3 கூட்டத் தொடர்களில் எந்த உறுப்பினராவது தொடர்ந்து கலந்து கொள்ளாமல் இருந்தால் அவரது எம்.எல்.ஏ.பதவியை சபாநாயகரால் பறிக்க முடியும்.
இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி கருணாநிதியின் எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாகக்கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கருணாநிதி சட்டசபைக்குள்ளேயே நுழையவில்லை. சபாநாயகர் காளிமுத்துவின்அறையில் வைத்துத் தான் தனது எம்.எல்.ஏ. பதவியைக் கூட ஏற்றுக்கொண்டார். எதிர்க் கட்சித் தலைவராகஅன்பழகனைத் தான் நியமித்தார் கருணாநிதி.
இந நிலையில் வரும் மார்ச் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர்கூடுகிறது.
பிப்ரவரி 21ம் தேதி ஆண்டிப்பட்டி தேர்தல் முடிந்த கையோடு ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வார் என்று அதிமுக கருதுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் சட்டமன்றக்கூட்டத் தொடர் மார்ச் 13ம் தேதிக்குள் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா பதவி இழந்த பின்னர் சட்டசபைக் கூட்டமே நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஜெயலலிதா முதல்வராக அமரும் பட்சத்தில் சட்டசபைக்கு கருணாநிதி வருவாரா என்பது சந்தேகம் தான்.எனவே, சட்டசபையின் மூன்று கூட்டத் தொடர்களிலும் அவை நடவடிக்கைளில் கலந்து கொள்ளவில்லை என்றுகூறி கருணாநிதியின் பதவியைப் பறிக்க முடியும்.
இது கருணாநிதிக்கும் தெரியும். ஆனால், அவர் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை என்று தெரிகிறது. பதவியைநான் ராஜினாமா செய்ய மாட்டேன். பறித்தால் பறித்துக் கொண்டு போகட்டும் என அவர் தனது சகாக்களிடம்கூறிவிட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications