விருப்ப ஓய்வுத் திட்டம்: மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி
சென்னை:
மத்திய அரசு அறிவித்துள்ள விருப்ப ஓய்வுத் திட்டத்துக்கு ஏராளமான ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அளவுக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களைக் குறைப்பதற்காக மத்திய அரசு நேற்று (செவ்வாய்க்கிழமை)விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கு (வி.ஆர்.எஸ்.) ஒப்புதல் அளித்தது.
பணியாற்றிய காலத்திற்கு ஒரு ஆண்டுக்கு 35 நாள் ஊதியம் என்ற விகிதத்தில் கருணைத் தொகை வழங்கப்படும்என்றும் எஞ்சிய பணிக் காலத்திற்கு ஒரு ஆண்டுக்கு 25 நாள் ஊதியம் வழங்கப்படும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர மற்றும் பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் மத்திய அரசு ஊழியர்கள் - குறிப்பாக பெண்கள் - மத்தியில் வி.ஆர்.எஸ். திட்டத்திற்கு பெரும் எதிர்ப்புகிளம்பியுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் பெண்கள்தான் வேலை செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
பெண்கள் தைரியமாக வந்து வேலை செய்வதன் காரணமாகத்தான் பெண்ணடிமைத்தனமே ஒழிந்தது என்று கூறும்பெண்கள், இந்தத் திட்டத்தால் மீண்டும் பெண்ணடிமை அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
மேலும் இந்த வி.ஆர்.எஸ். திட்டத்தால் மக்கள் சேவைதான் முக்கியமாகப் பாதிக்கப்படப் போகிறது என்றுபெரும்பாலான ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications