மதுரை மாநகராட்சி ஊழியர்கள் ஸ்டிரைக்: பணிகள் பாதிப்பு
மதுரை:
மதுரை மாநகராட்சி ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், துப்புரவுப் பணிகள்உள்பட மாநகராட்சியின் அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டன.
விடுப்பு பயணச் சலுகை, பண்டிகை போனஸ் உள்பட 33 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மதுரை மாநகராட்சிஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
16 சங்கங்களைச் சேர்ந்த சுமார் 3,000 மாநகராட்சி ஊழியர்கள் இன்று மதுரை மாநகராட்சி முன்பாகத் திரண்டுதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஒரு ஊழியரிடம் கேட்டபோது, "எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பல முறை கேட்டுப்பார்த்து விட்டோம். தர்றோம். அரசுக்கு எழுதியிருக்கோம்" என்று மாநகராட்சி நிர்வாகத்தினர் கூறிவிட்டதாக அவர்தெரிவித்தார்.
எனவே இதுகுறித்து உடனடியாக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், நாங்கள் காலவரையற்றவேலைநிறுத்ததைத் தொடருவோம் என்றும் அந்த ஊழியர் கூறினார்.
மாநகராட்சி ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தத்தால் மதுரை முழுவதும் துப்புரவுப் பணிகள் உள்பட அனைத்துப்பணிகளும் பாதிக்கப்பட்டன.
ஏற்கனவே கடந்த 4ம் தேதி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி இவ்வூழியர்கள் மதுரையில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications