மதுரையைக் கலக்கிய பிரபல ரவுடி கைது
மதுரை:
மதுரையில் 4 கொலைகள் மற்றும் குண்டு வெடிப்பு சம்பந்தமாகத் தேடப்பட்டு வந்த முக்கியமான ரவுடி ஒருவன்தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டான்.
ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு கும்பலுடன் மதுரையில் உள்ள தன்னுடைய அப்பாவின் எதிரி வீட்டிற்கு சென்றஅவன், நாட்டு வெடிகுண்டை வீசியதில் அவருடைய மனைவி மற்றும் பேத்தி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
போலீசார் இவனை மடக்கிப் பிடிக்க முயன்றபோது போலீசார் மீதும் வெடிகுண்டுகளை வீசியுள்ளான். பிறகுதலைமறைவாகி விட்ட இந்த ரவுடி திரைப்படம் ஒன்றிலும் நடித்துள்ளான்.
ஆனால் இந்தப் படம் முடியும் முன்பாகவே அந்தப் படத் தயாரிப்பாளர் கொலை செய்யப்பட்டார். இந்தக்கொலைக்கும் ரவுடிக்கும் சம்பந்தமுள்ளதாகப் போலீசார் கருதுகின்றனர்.
மேலும் பிரபலமான டைரக்டர் ஒருவர் படத்திலும் இவன் நடிக்க ஒப்பந்தாமாகியுள்ளதாக மதுரை போலீசார்கூறினர். அவனுக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் கைது செய்தபோது அவனால் நடக்க முடியவில்லைஎன்றும் போலீசார் கூறினர்.












Click it and Unblock the Notifications