தோழர்கள் இணைவார்களா?
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைவது குறித்து கோவையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெறும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டின்போது விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ள சூழ்நிலையில் தமிழக அரசியலில் அடுத்த கட்டமாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கோவையில்திங்கள்கிழமை நடக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை செயற்குழுக் கூட்டம் நடந்ததையடுத்துது திங்கள்கிழமை மாநில மாநாடு நடக்கிறது. மாநிலமாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் நல்லகண்ணுவிற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 1988ம் ஆண்டு முதல் இரு கட்சிகளும் இணைந்தே செயல்பட்டு வருகின்றன. முக்கியமாகதேர்தல்களின்போது இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் தான் இருக்கின்றன.
தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் இரு கட்சிகளும் சேர்ந்தே பேச்சுவார்த்தையில் பங்கு பெறுகின்றன.தொண்டர்கள் அளவிலும், தலைவர்கள் அளவிலும் கருத்து ஒருமித்து இரு கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இரு கட்சிகளும் விரைவில் இணையலாம் என்று பேச்சு அடிபட்டு வருகிறது. இருப்பினும்உடனடியாக அது இருக்காது என்றும் இதுகுறித்து கோவை மாநாட்டின்போது பேசப்படும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications