நாளை புதிய வாக்காளர் பட்டியல் வெளியீடு
சென்னை:
தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் நாளை (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் நிறைய குளறுபடிகள் இருந்ததாகபுகார்கள் கூறப்பட்டன. ஏராளமான வாக்காளர்கள் அடையாள அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் இல்லாததால்ஓட்டுப் போட முடியாமல் புலம்பினர்.
இதையடுத்து வாக்காளர் பட்டியலை உடனடியாகத் திருத்தம் செய்யுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 11ம் தேதி வரை வாக்காளர்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைத் தவிரமற்ற அனைத்து மாவட்டங்களிலும் புதிய வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.
அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி,நகராட்சி, நகரப் பஞ்சாயத்து அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்குவைக்கப்பட்டிருக்கும்.
இவைதவிர அனைத்து வாக்குச் சாவடிகளிலும்கூட வாக்காளர் பட்டியல் வைக்கப்படவுள்ளது.
வரும் 27ம் தேதி வரை இந்தப் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கும். அதில்திருத்தங்கள் ஏதும் செய்ய வேண்டியிருப்பின், அதற்கான விண்ணப்பங்களை அந்த அலுவலகங்களிலேயே வாங்கிவிண்ணப்பிக்கலாம்.
இதன் பின் ஏப்ரல் 10ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications