புவனகிரி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து 6 பேர் பலி
புவனகிரி:
புவனகிரி அருகே நேற்று (புதன்கிழமை) மாலை டேங்கர் லாரி கவிழ்ந்து பஸ்சுக்காகக் காத்திருந்த மக்கள்கூட்டத்தில் பாய்ந்ததில் 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
நரிமணத்திலிருந்து சென்னைக்கு ஒரு ஆயில் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது.
அப்போது கீரப்பாளையத்திலிருந்து புவனகிரி பாதையை நோக்கி லாரி திரும்புகையில், அது கட்டுப்பாட்டைஇழந்து சாலையோரமாகக் கவிழ்ந்தது.
அங்கு சாலையோரமாகப் பஸ்சுக்காகப் பொதுமக்கள் காத்துக் கொண்டிருந்தனர். வேகமாக வந்த அந்த டேங்கர்லாரி கவிழ்ந்த பிறகும் நீண்ட தூரம் தரையிலேயே உரசிக் கொண்டு போய் அந்த மக்கள் கூட்டத்தில் பாய்ந்தது.
இச்சம்பவத்தில் பஸ்சுக்குக் கீழே சிக்கி 4 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இவ்விபத்தில் சிக்கிய மற்ற 17 பேர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் அங்கு 2 பேர் உயிரிழந்தனர்.
வடகரி ராஜபுரத்தைச் சேர்ந்த கோபு என்பவரின் மனைவி சித்ரா (45), கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பெருமாள்(40), புவனகிரியைச் சேர்ந்த செல்வராஜ் (40), அன்பழகன் (40) மற்றும் ஆலிச்சிக்குடியைச் சேர்ந்த முருகன் (65)ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இறந்த மற்றொரு ஆண் யார் என்பது தெரியவில்லை.
பெரம்பலூரைச் சேர்ந்த அந்த டேங்கர் லாரியின் டிரைவர் பாபு சிதம்பரம் போலீசாரிடம் சரணடைந்தார். கிளீனர்பற்றிய விவரம் தெரியவில்லை.
புவனகிரி போலீசார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சி அருகே லாரி கவிழ்ந்து 3 பேர் சாவு:
இதற்கிடையே நேற்று காலை காஞ்சிபுரம் அருகே லாரி கவிழ்ந்து 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த அந்த லாரி, தாமல் அருகே வந்தபோது அன்பழகன் (27),சிவகாமி (18) மற்றும் ஜானகி (19) ஆகிய 3 பேரும் அந்த லாரியின் பின்புறத்தில் ஏறிக் கொண்டனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த நீர்வளூர் அருகே வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, அருகிலிருந்தபள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இதில் அன்பழகன், சிவகாமி மற்றும் ஜானகி ஆகிய 3 பேருமே லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.டிரைவரும் கிளீனரும் தப்பி ஓடிவிட்டனர்.
இவ்விபத்து குறித்து காஞ்சிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications