சென்னையில் தேடப்பட்ட 4 கொள்ளையர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் திருட்டு மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்ட 4 முக்கிய கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டன.
திருட்டு, வழிப்பறி, கொள்ளை என்று சென்னை நகரை 4 கொள்ளையர்கள் கலக்கி வந்தனர். இவர்களால்பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இவர்களைப் பிடிக்க 2 போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி,கொள்ளையர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
இவர்களில் 2 பேர் வழிப்பறியில் ஈடுபட்டபோது போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
இந்த 4 கொள்ளையர்களின் பெயர்கள் கேசவன் (38), முரளி (19), தெலுங்கு குமார் (21), ராஜூ (24).இவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள், பொருட்கள் மீட்கப்பட்டன.












Click it and Unblock the Notifications