1986 குண்டு வெடிப்பில் தண்டனை பெற்ற 3 கைதிகளுக்கு ஜாமீன்
சென்னை:
1986ல் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 7 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற 3 திமுக மாணவர் அணிதலைவர்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) ஜாமீனில் விடுதலை செய்தது.
கடந்த 1986ம் ஆண்டு இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து திமுகவினர் போராரட்டம் நடத்தினர். அப்போதுஅரசியல் சாசன நகலை திமுக தலைவர் கருணாநிதி எரித்ததன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து தமிழகத்தில் வன்முறை வெடித்தது. சென்னையில் உள்ள ஹிந்தி பிரச்சார சபா, ஏர் இந்தியாஅலுவலகம், பல்லவன் போக்குவரத்துக்கழக டெப்போ மற்றும் சேத்துப்பட்டு ரயில் நிலையம் ஆகிய இடங்களைதிமுகவினர் வெடிகுண்டு வைத்துத் தகர்த்தனர்.
இது சம்பந்தமாக 1998ல் சி.ஐ.டி. போலீசார் தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். வெடிகுண்டுவைத்து பொது மக்களின் சொத்துக்களை நாசப்படுத்தியதாக திமுக மாணவர் அணித் தலைவர்களான எராகென்னடி, மதி, தினகரன் மற்றும் நீலநாராயணன் ஆகிய 4 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம் எரா கென்னடி, மதி மற்றும் தினகரன் 3 பேருக்கும் 7 ஆண்டுகள்கடுங்காவல் தண்டனையும் ரூ.20,000 அபராதமும் அளித்து தீர்ப்பளித்தார்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கென்னடி, மணி, தினகரன் ஆகிய 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம் இவர்களை இன்று (வியாழக்கிழமை) ஜாமீனில் விடுதலைசெய்தார்.
ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 தனி நபர் ஜாமீனும், அதே தொகைக்கு இருவர் ஜாமீனும் விதித்து நீதிபதிதீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியான நீலநாராயணன் இன்னும் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications