ஈரோடு அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து குழந்தை சாவு
ஈரோடு:
ஈரோடு அருகே குழந்தையிடம் குருவி சுடும் துப்பாக்கியைக் காட்டி விளையாட்டுக் காட்டும்போது, திடீரென்றுதுப்பாக்கி வெடித்ததில் குண்டு பாய்ந்து குழந்தை பரிதாபமாக இறந்தது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள காங்கயம்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ரவி. இவரதுஒன்றரை வயது குழந்தை பிரேம். ரவி வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருப்பவர் வெங்கடாசலபதி (29).
இவர் பக்கத்து வீட்டு குழந்தை பிரேமை அடிக்கடி தூக்கி வைத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டி வருவார்.இவரிடம் குருவி சுடும் துப்பாக்கி உள்ளது. அதை வைத்துக் கொண்டும் அடிக்கடி விளையாட்டுக் காட்டி வருவார்.
அதுபோல் சம்பவத்தன்றும் குழந்தையிடம் துப்பாக்கி காட்டி விளையாட்டுக் காட்டியுள்ளார் வெங்கடாசலபதி.அப்போது தவறுதலாக துப்பாக்கி விசையை விரல் தட்டி விட்டதால், துப்பாக்கி வெடித்து குழந்தையின் வயிற்றில்குண்டு பாய்ந்தது.
இதனால் காயமடைந்த குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சைபலனளிக்காமல் குழந்தை இறந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் வெங்கடாசபதியை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications