Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணிப்பூர் தேர்தலில் வன்முறை: 2 போலீசார் பலி

Subscribe to Oneindia Tamil

இம்பால்:

மணிப்பூரில் இன்று (வியாழக்கிழமை) நடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையில் எல்லைப்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 2 போலீசார் கொல்லப்பட்டனர்.

வடக்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்குள் திடீரென்று புகுந்த சில தீவிரவாதிகள் அங்குபாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசாரை நோக்கி சராமாரியாகச் சுட ஆரம்பித்தனர்.

இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அந்தப் போலீசாரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர்.இங்கு நடந்த பயங்கரமான துப்பாக்கிச் சண்டையில் 2 எல்லைப் பாதுகாப்புப் படை போலீசார் கொல்லப்பட்டனர்.வேறு 4 போலீசார் படுகாயமடைந்தனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் வாக்குப் பதிவில் பாதிப்பு ஏற்பட்டாலும், மேலும் ஏராளமான போலீசார் அங்குகுவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் வாக்குப் பதிவு தொடர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்னும் சில இடங்களில் தீவிரவாதிகள் திடீரென்று புகுந்து துப்பாக்கி முனையில் ஓட்டுச் சீட்டுக்களைப் பறித்துக்கொண்டு ஓடிய சம்பவங்கள் நடந்தன. அங்கெல்லாம் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள்அறிவித்தனர்.

இந்நிலையில் இன்றைய மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் 40 முதல் 45 சதவீதம் வரை வாக்குகள்பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

உ..பியும் வன்முறைக்குத் தப்பவில்லை:

இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் (உ.பி.) இன்று நடந்த சட்டசபைத் தேர்தலிலும் ஆங்காங்கே வன்முறைகள்வெடித்தன.

உ.பியில் இன்று நடந்த முதல்கட்டத் தேர்தலின்போது, சுமன் லதா சிங் என்ற பெண் பாஜக வேட்பாளரைஅடையாளம் தெரியாத சிலர் பயங்கரமாகத் தாக்கினர். ஆனால் அவருடைய பாதுகாவலர்கள் பதிலடி தாக்குதல்நடத்தி, அவரைப் பத்திரமாக மீட்டனர்.

மேலும் சில இடங்களில் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் போன்ற சிற்சில சம்பவங்கள் நடைபெற்றாலும்,உ.பியில் பொதுவாக இன்று அமைதியாகவே தேர்தல் நடந்து முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இம்மாநிலத்தில் தேர்தலின்போது யாரும் செல்போனைப் பயன்படுத்தக் கூடாது என்று போலீசார்உத்தரவிட்டிருந்தனர். அதன்படி தேர்தல் நேரம் முடியும் வரை செல்போனை "ஆப்" செய்து வைத்திருக்க வேண்டும்என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

உத்தராஞ்சல் சந்தித்த முதல் தேர்தல்:

இதற்கிடையே உத்தராஞ்சல் மாநிலம் துவக்கப்பட்ட பிறகு, இன்றுதான் அங்கு முதல் முறையாக சட்டசபைத் தேர்தல்நடந்துள்ளது.

கடந்த 4 நாட்களாக பனிமழை பொழிந்து வந்த உத்தராஞ்சல் மாநிலத்தின் ஏராளமான பகுதிகளில் இன்றுகாலையிலேயே வெயிலடித்து மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

அவர்களும் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று சுறுசுறுப்புடன் ஓட்டுப் போட்டனர்.

உத்தராஞ்சல் மாநிலத்தில் தேர்தலின்போது எந்தவிதமான வன்முறையும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள்தெரிவித்தனர்.

முதல் முறையாக மின் வாக்குப்பதிவு எந்திரங்கள்:

இந்நிலையில் இந்த 3 மாநிலங்களிலுமே முதல் முறையாக மின் வாக்குப்பதிவு எந்திரங்கள் இந்த சட்டசபைத்தேர்தலில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.

முதல் முறையாக இந்த மின் வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் ஓட்டுப் போடுவதால் மக்கள் ஆச்சரியத்துடனும்சற்றே "த்ரில்"லுடனும் வந்து ஆர்வத்துடன் ஓட்டுப் போட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+