கோடையில் மின்வெட்டு வராது: அமைச்சர் தகவல்
ராமநாதபுரம்:
தமிழகத்தில் வரும் கோடைக் காலத்தில் மின்வெட்டு இருக்காது என்று மாநில மின்துறை அமைச்சர் ஜெயக்குமார்கூறினார்.
ராமநாதபுரத்தில் நேற்று (புதன்கிழமை) நிருபர்களிடம் ஜெயக்குமார் கூறியதாவது:
போதுமான மின் உற்பத்தி தமிழகத்திற்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டுதான் உள்ளது. அதனால் எத்தகைய மின்பற்றாக்குறையையும் சமாளிக்க முடியும் என்பதால் வரும் கோடைக் காலத்தில் மின் தடை இருக்காது.
ராமநாதபுரம் போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பழைய மின் கம்பங்களும் டிரான்ஸ்பார்மர்களும்விரைவில் மாற்றப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வழுதூரில் ரூ.293 கோடித் திட்டத்தில் துவங்கப்பட்டுள்ள இயற்கை வாயு மின்உற்பத்தித் திட்டத்தில் 70 சதவீதப் பணிகள் முடிவடைந்துவிட்டன.
வரும் ஏப்ரல் மாதத்தில் வழுதூரில் இயற்கை வாயு மின் உற்பத்தி தொடங்கும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் 2 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். அதற்குப் பிறகுஇம்மாவட்டத்தில் மின்தடையே வராது என்றார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications