For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை வைர வியாபாரி வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையைச் சேர்ந்த வைர வியாபாரி வங்கியில் ரூ.6 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரைஅடுத்து, அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னையில் வைர வியாபாரம் செய்து வருபவர் குஜராத்தை சேர்ந்த ஷா. இவருக்கு டெல்லி, மும்பை, பெங்களூர்என்று இந்தியா முழுவதும் அலுவலகங்களும் வைர வியாபார நிறுவனங்களும் உள்ளன.

ஷா குடும்பத்தினர் தேசிய மயமாகக்கப்பட்ட ஆந்திரா வங்கியில் ரூ.6 கோடி கடன் வாங்கியுள்ளனர். ஆனால்கடனை திருப்பிச் செலுத்தவில்லை.

வங்கி அதிகாரிகள் இவரது குடும்பத்தினருக்கு பல்வேறு சலுகைகள் காட்டி, செக்யூரிட்டி இல்லாமலே இந்த கடனைவழங்கியதாக கூறப்படுகிறது. எனவே இந்த மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கும் பங்கு இருக்கலாம் என்றுகூறப்படுகிறது.

ஷா குடும்பத்தினர் மோசடி செய்துள்ளதாக டெல்லி சி.பி.ஐ.க்கு வந்த புகாரையடுத்து சென்னையில் உள்ள ஷாகுடும்பத்தினரின் வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ. போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

இதே போல் டெல்லி, மும்பை உள்பட ஷா குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகளிலும் போலீசார் ஒரே நேரத்தில்சோதனை நடத்தினர். ஆந்திரா வங்கி தவிர வேறு சில வங்கிகளிலும் அவரது குடும்பம் கணக்கு வைத்துள்ளது.இவற்றிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனை வங்கி அதிகாரிகளின் வீட்டிலும் நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் ஷாவின் மோசடிக்குஉதவியாக இருந்த அதிகாரிகள், ஷா குடும்பத்தினர் ஆகியோர் கைதாகலாம் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள்தெரிவித்தன.

நாடு முழுவதும் இதுபோன்ற சி.பி.ஐ. அதிரடி ரெய்டுகள் கடந்த 3 நாட்களாக நடந்து வருகின்றன. இவைதொடர்பாக 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விரைவில் கைதாவார்கள் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X