அன்சாரியை கொல்ல ஐ.எஸ்.ஐ.சதி
டெல்லி:
கொல்கத்தா அமெரிக்க மையம் தாக்கப்பட்டது தொடர்பாக கைதாகி உள்ள தீவிரவாதி அப்தாப் அன்சாரியைக்கொல்ல பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. சதி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் துபாயில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட அன்சாரி ஆள்கடத்தல், ஹவாலாமோசடி உட்பட பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவன்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐதான் இவனைத் தயார் செய்து இந்தியாவில் நாச வேலையில் ஈடுபடஅனுப்பி வைத்தது. குஜராத்தில் ஆள்கடத்தல் தொடர்பாக இவனை, ராஜ்கோட் போலீசார் காவலில் வைத்துவிசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் அன்சாரியைக் கொல்ல பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. நிறுவனம் சதியில் ஈடுபட்டுள்ளது. குஜராத்தில்உள்ள ஜஸ்ஸார் பகுதியில் வயர்லெஸ் செய்தியை குறுக்கிட்டு கேட்ட போது இந்த செய்தி கிடைத்துள்ளது.
அதன்படி கூலிப்படைகளை வாடகைக்கு அமர்த்தி அன்சாரியை கொல்ல ஐ.எஸ்.ஐ. சதி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் அன்சாரியிடம் ஹவாலா மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து சி.பி.ஐ. விசாரித்தது. இவனின்வாக்குமூலத்தின் படி சர்தா பஜ்ரங் லால், புருஷோத்தம் தாஸ் குப்தா, ஜாவித் மன்சூர் ஆகியோரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ரூ.40 லட்சத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications