For Quick Alerts
For Daily Alerts
Just In
இந்தியாவுக்கு நவீன ரேடார்கள் தர அமெரிக்கா முடிவு
வாஷிங்டன்:
எதிரி நாட்டுத் துப்பாக்கிகளை கண்டுபிடிக்க உதவும் நவீன ரேடார்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா முடிவுசெய்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை இந்த ஆயுதங்களை இந்தியாவுக்குத் தர அமெரிக்க நாடாளுமன்றத்திடம்அனுமதி கோரியுள்ளது. இந்த ஆயுதங்களின் மொத்த மதிப்பு ரூ.800 கோடி ஆகும்.
எதிரி நாட்டுத் துப்பாக்கிகளை கண்டறியும் 3 ரேடார் கருவிகள், 26 நவீன ரேடியோ கருவிகள், ராணுவஜெனரேட்டர்கள் உட்பட ராணுவத்திற்கு தேவையான முக்கிய ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்காமுடிவு செய்துள்ளது.
Comments
Story first published: Tuesday, February 26, 2002, 5:30 [IST]