காஷ்மீர் தீவிரவாதிகளின் கண்ணிவெடிக்கு திருவள்ளூர் வீரர் பலி
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்:
காஷ்மீரில் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவவீரர் தணிகாசலம் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ராமன்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம் (21). ராணுவத்தில் பணியாற்றி வந்தஇவர், காஷ்மீர் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இந்திய முகாமில் இருந்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் சேரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடிகளை ராணுவவீரர்கள் அகற்றிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கண்ணிவெடி வெடித்ததில் தணிகாசலம் சிக்கிஇறந்தார்.
உடல் பல துண்டுகளாக சிதறி விட்டதால் அவரது உடல் அடக்கம் அங்கேயே முழு ராணுவ மரியாதையுடன்நடந்தது.
தணிகாசலத்தின் உயிர்த் தியாகம் குறித்த தகவல் வந்ததும் ராமன்சேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.












Click it and Unblock the Notifications