தேர்தல் கமிஷனை எதிர்க்க கட்சிகளுக்கு கருணாநிதி அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேர்தலை புறக்கணித்த கட்சிகளுக்கு ஆண்டிப்பட்டி பற்றி அக்கறை இல்லாமல் போனாலும், அடுத்து வரும்தேர்தல்களில் இந்த ஜனநாயக விரோத அடாவடித்தனத்துக்கு தேர்தல் கமிஷன் துணை நிற்காமல் பார்த்துக்கொள்ளும் அக்கறை இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து சென்னையில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தமிழ் நாளிதழ் ஒன்று வெளியிட்ட கட்டுரையில் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவின் வெற்றியை நான் எதிர்பார்த்துஇருந்ததாக குறிப்பிட்டிருந்தார்கள். எதிர்பார்த்த ஒன்றுதான் என்று நான் நிருபர்களிடம் சொன்னதை முழுமையாகஆய்வு செய்யாமல் அப்படி எழுதி விட்டனர்.

எதிர்பார்த்த ஒன்று என்பதில் பல உட்கருத்துக்கள் உண்டு. எப்படி? என்னென்ன செய்து? அரசு இயந்திரத்தைஎப்படியெல்லாம் பயன்படுத்தி? தேர்தல் விதிமுறைகளை எப்படியெல்லாம் மீறி? போலீஸ் அதிகாரிகளை எப்படிமுடுக்கி விட்டு? இதுபோன்ற கேள்விகள் எல்லாம் அந்த ஒரே சொல்லில் அடங்கியுள்ளது.

தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு தேர்தலில் வாக்களிக்க 17வதாக ஒரு சான்றை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்தஅறிவிப்பால் போலி வாக்காளர்களின் வாக்குகளை எல்லாம் செல்லுபடியாகும் வாக்குகளாக ஆளுங்கட்சியினர்மாற்றிக் கொண்டனர்.

இந்த ஜனநாயக விரோத செயலுக்கு தேர்தல் கமிஷனும் துணை போயிருப்பதை பார்க்கும்போது, இந்தியஜனநாயகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று ஏங்கி பெருமூச்சு விடாமல் இருக்க முடிகிறதா?

நடுநிலையில் இருக்க வேண்டிய மத்திய, மாநில தேர்தல் கமிஷன்கள் இப்படி நடந்து கொள்ளும் என்றுஎதிர்பார்க்கவே இல்லை.

தேர்தலைப் புறக்கணித்த கட்சிகளுக்கு ஆண்டிப்பட்டி பற்றி அக்கறையில்லாமல் போனாலும், அடுத்து வரும்தேர்தல்களில் இந்த ஜனநாயக விரோத அடாவடித்தனத்துக்கு தேர்தல் கமிஷன் துணை நிற்காமல் பார்த்துக்கொள்ளும் அக்கறை வேண்டும் என்று அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+