ஆளுநரைச் சந்தித்தார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவை முதல்வராகப் பதவியேற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாஇன்று (புதன்கிழமை) காலை சந்தித்தார். ஆனால் அமைச்சரவைப் பட்டியல் எதையும் ஆளுநரிடம் அவர்கொடுக்கவில்லை.

ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சட்டசபை அதிமுக தலைவராக ஜெயலலிதாதேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் முதல்வர் பன்னீர்செல்வமும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததையடுத்துஅவரைப் பதவியேற்க வருமாறு ஆளுநரும் அழைத்துவிட்டார்.

ஆனால் வரும் மார்ச் 2ம் தேதிதான் ஜெயலலிதா பதவியேற்கப் போவதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. அவர்பதவியேற்பதற்காக சென்னை சேப்பாக்கம் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் வெகு வேகமாகத்தயாராகி வருகிறது.

புதிய அமைச்சரவைப் பட்டியலையும் ஜெயலலிதா தயார் செய்து விட்டார் என்றும் அதை இன்று அவர் ஆளுநரிடம்சமர்ப்பிப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை ஆளுநர் மாளிகையான ராஜ் பவனுக்குச் சென்ற ஜெயலலிதா, ராம்மோகன் ராவைச்சந்தித்தார்.

தன்னை முதல்வராகப் பதவியேற்க அழைத்ததற்காக ஆளுநருக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்தார். சுமார் 20நிமிடங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

பின்னர் வெளியே வந்த ஜெயலலிதா, மரியாதை நிமித்தமாகத்தான் ஆளுநரைச் சந்தித்ததாகவும் புதியஅமைச்சரவை பட்டியலை அவரிடம் கொடுக்கவில்லை என்றும் நிருபர்களிடம் கூறினார்.

தமிழக முதல்வராகப் பதவியேற்பதில் சட்ட ரீதியாக உள்ள தடைகள் பற்றி ஆளுநரிடம் பேசினீர்களா என்றுநிருபர்கள் கேட்டதற்கு, சட்ட ரீதியாக எனக்கு எந்தவிதமான தடையும் இல்லை, அது பற்றி கேள்வியே எழவில்லைஎன்று ஜெயலலிதா பதிலளித்தார்.

இதையடுத்து மார்ச் 2ம் தேதி ஜெயலலிதா மட்டுமே முதல்வராகப் பதவியேற்கவுள்ளார் என்றும் அமைச்சர்கள்அதன் பிறகு வேறொரு நாளில் பதவியேற்பார்கள் என்றும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+