சாந்தகுமார் கொலை: ராஜகோபால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரைக் கொன்றதன் பின்னணியில் ஹோட்டல்சரவண பவன் அதிபர் ராஜகோபால் முக்கிய நபராக இருந்திருக்கிறார் என்று ராஜகோபால் மீது சென்னைபோலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள 9-வது மெட்ரோபாலிடன் நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் முன்பு இந்த 10 பக்ககுற்றப்பத்திரிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கடத்தச் சொல்லியும், பின்னர் கொடைக்கானலில் வைத்து அவரைக் கொலைசெய்யும்படியும் தனது ஆட்களுக்கு ராஜகோபால்தான் உத்தரவிட்டுள்ளார்.
சாந்தகுமாரும் ஜீவஜோதியும் திருச்செந்தூருக்கு கட்டாயப்படுத்தி ராஜகோபாலால் அழைத்துச் செல்லப்பட்டனர்.அவரது வீட்டில் அக்டோபர் 24ம் தேதி வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு வைத்துதான் சாந்தகுமாரைக் கொல்வது என்ற முடிவுக்கு ராஜகோபால் வந்துள்ளார். ஜீவஜோதியைத்திருமணம் செய்து கொள்வதற்கு இடையூறாக சாந்தகுமார் இருந்ததால் அவரைக் கொலை செய்ய ராஜகோபால்முடிவு செய்தார்.
அக்டேபார் 26ம் தேதி ராஜகோபாலின் ஹோட்டலில் பணியாற்றும் சிலர் சாந்தகுமாரை ஒரு காரில் கடத்திச்சென்றனர். கொடைக்கானலில் வைத்து அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். பின்னர் உடலை மலைப்பகுதியில் போட்டு விட்டுச் சென்றனர் என்று அந்தக் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொலை செய்தது, கொலைக்கு உதவியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ராஜகோபாலுக்கு எதிராககுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜகோபாலின் ஜாமீன் மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.