அந்நிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா கோர்ட்டில் ஆஜர்
சென்னை:
அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்பான புகாரை நேற்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜரான சசிகலாபெற்றுக் கொண்டார்.
கோத்தகிரியில் எஸ்டேட் வாங்குவதற்காக, சசிகலாவுக்கு சுசீலா என்பவர் 19,91,610 டாலர்களை கொண்டு வந்தார்.இந்த டாலர் பின்னர் இந்தியன் வங்கியில் இந்திய பணமாக மாற்றப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கிக்கு தெரியாமல்இந்த பணம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா மீது அந்நிய செலாவணி மோசடி வழக்குதொடரப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாகஆஜராகும்படி சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் ஆஜராகாததால் வழக்கு 7 முறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை எழும்பூர்நீதிமன்றத்தில் சசிகலா ஆஜரானார். நீதிபதி ராமலிங்கம் வழக்கு தொடர்பான புகாரை சசிகலாவிடம் வழங்கினார்.
பின்னர் வழக்கு விசாரணை மார்ச் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும், ஜெயா டிவிக்குடிரான்ஸ்பாண்டர்ஸ் வாங்கியதிலும், ஸ்புட்னிக் நிறுவனத்திலிருந்து பொருட்கள் வாங்கியதிலும் அன்னியசெலாவணி மோசடி நடந்துள்ளது. இந்த வழக்கிலும் சசிகலா ஆஜரானார்.