தமிழக-கேரள எல்லைப்புற வனப் பகுதியில் பயங்கர தீ
கோயம்புத்தூர்:
தமிழக-கேரள எல்லையில் உள்ள வனப் பகுதிகளில் சமீபத்தில் தீ காரணமாக 200 ஹெக்டேர் நிலம் அழியும்அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையில் உள்ள வாளையார், வட்டப்பாறை, ஆத்துபதி, நடுப்பதி, சந்திராபுரம், பாரப்பட்டிவனப்பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று தீப்பிடித்தது.
இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் இந்த தீயை 8 இடங்களில் தலா 10 பேர் கொண்ட தீயணைப்புக் குழுவினர்தீயை அணைக்க முயன்று வருகின்றனர்.
ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வீசும் பலமான காற்றினால் தீயின் வேகம் அதிகரித்துள்ளது.இதனால் சனிக்கிழமை சுமார் 200 ஹெக்டேர் வனப்பகுதி தீயில் கருகி நாசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வனப்பகுதியில் பிடித்த தீயினால் பாரப்பட்டி உள்மலை, நடுப்பகுதி வன பகுதியில் உள்ள குடிசைகளை காலி செய்யகேரள வனத்துறை சனிக்கிழமை உத்தரவிட்டது. இதனால் இப்பகுதி மக்கள் 20க்கும் மேற்பட்ட குடிசைகளை காலிசெய்து மலை அடிவாரத்துக்கு வந்தனர்.
இன்னும் ஒரு வாரம் இந்த வனப்பகுதியில் தொடர்ந்து தீ எரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளப் பகுதியில் பிடித்த வனத் தீயால் கேரள வனப்பகுதியில் வசிக்கும் யானை, புள்ளி மான், கடமான், காட்டுஆடு, காட்டுப் பன்றி போன்ற வன விலங்குகள் வாளையார் பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளன.












Click it and Unblock the Notifications