ஜெயலலிதாவுக்கு சந்திரிகா வாழ்த்து
சென்னை:
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வாழ்த்துத்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
ஆண்டிப்பட்டி மக்களின் தீர்ப்பு ஜெயலலிதாவை தமிழக மக்கள் தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்துக்கொண்டுவிட்டதை தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.
தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே வரலாற்றுத் தொடர்புகள் உண்டு. எங்கள் நாட்டு மக்களுக்கும் தமிழகமக்களுக்கும் சமூக, கலாச்சார, மதரீதியிலான தொடர்புகள் பழங்காலம் தொட்டே இருந்து வந்துள்ளன.
சென்னைக்கும் கொழும்புவுக்கும் இடையே மக்கள் பயணிப்பதும் அதிகரித்துள்ளது. இதனால் இரு தமிழகத்துக்கும்இலங்கைக்கும் இடையிலான உறவு மேலும் பலப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் வளம் பெரும் நாம் இருவரும் இணைந்து பணியாற்ற முடியும் என்று நம்புகிறேன் என அக்கடிதத்தில் சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.