அயோத்தி: முடிந்ததை செய்தேன் - காஞ்சி சுவாமிகள்
காஞ்சிபுரம்:
அயோத்தி பிரச்சனையைத் தீர்ப்பதற்கு என்னால் முடிந்த வரைக்கும் உதவி செய்தேன் என்று காஞ்சிசங்கராச்சாரியார் ஜெயேந்திர சுவாமிகள் கூறினார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சனையில் ஜெயேந்திர சுவாமிகள் சமரசத் திட்டம் ஒன்றை வகுத்துக்கொடுத்தார்.
இதையடுத்து வரும் 15ம் தேதி அயோத்தியில் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட நிலத்தில் பூமி பூஜை நடைபெறும் என்றுவிஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்தது.
இந்நிலையில் முஸ்லீம் சட்ட வாரியத்தின் முக்கியக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடைபெற்றது.
ஜெயேந்திர சுவாமிகளின் சமரசத் திட்டத்தை முழுமையாக எதிர்ப்பதென்று இந்தக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது. மேலும் 15ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பூமி பூஜையை மத்திய அரசுதடுத்து நிறுத்த வேண்டும் என்றும் முஸ்லீம் சட்ட வாரியம் கோரியுள்ளது.
இதுகுறித்து ஜெயேந்திர சுவாமிகள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ராமர் கோவில் கட்டும் பிரச்சனையில் என்னால் முடிந்ததைச் செய்து விட்டேன்.
இனிமேல் இதில் சம்பந்தப்பட்டவர்களே இந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளட்டும் என்றார் சுவாமிகள்.
முஸ்லீம் சட்ட வாரியத்துக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிடுவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதற்குஇப்போது அவசியமே இல்லை என்றார் ஜெயேந்திர சுவாமிகள்.












Click it and Unblock the Notifications