தருமபுரி அருகே ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வறுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் (40). அவரது மனைவி சாந்தா (35),மகள்கள் சக்தி (7), மஞ்சு (3), பெற்றோர் ராமசாமி (80) மற்றும் லட்சுமி (75) ஆகிய அனைவரும் ஒரே வீட்டில்வசித்து வந்தனர்.
குடும்ப வறுமை காரணமாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். இதனால் மனவிரக்தியில் இருந்திருக்கிறார் சந்திரன்.
இந்நிலையில் 3வது முறையாக கர்ப்பமான சாந்தா பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குப் போயிருந்தார்.
அப்போது தனது குழந்தைகள் சக்தி, மஞ்சு, தந்தை ராமசாமி, தாயார் லட்சுமியம்மா ஆகியோருக்குவாழைப்பழத்தில் விஷம் வைத்து சந்திரன் கொடுத்தார். பின்னர் தானும் விஷம் வைத்த வாழைப்பழத்தைசாப்பிட்டுள்ளார்.
வாழைப்பழத்தைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே 5 பேரும் இறந்தனர். பிரசவத்திற்கு சென்றதால் சாந்தா உயிர்தப்பினார். இது குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications