மேட்டூர்-சென்னை ரயில் குடிநீர் ரத்து
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் மேட்டூரிலிருந்து சென்னை நகருக்கு ரயில் மூலம் குடிநீர்கொண்டு வரப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை நகரில் கடந்த ஆண்டு கோடைகாலத்தில் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் நிலவியதையடுத்து, பல்வேறுவழிகளில் சென்னை நகருக்கு குடிநீர் கொண்டு வர முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு செய்தார்.
மேட்டூரிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவது அதில் ஒன்று. ஆனால் தற்போது மேட்டூரிலிருந்து குடிநீர்கொண்டு வருவது நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதாலும், காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததாலும்ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவது நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் தற்போது 47 அடி நீரே இருப்பு உள்ளதால் இந்தத் திட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications