தூண் தானம் எங்கே நடைபெறும்? - "பரம ரகசியம்"
அயோத்தி:
அயோத்தியில் நாளை (வெள்ளிக்கிழமை) தூண் தானம் வழங்கும் நிகழ்ச்சி எங்கே நடைபெறும் என்பது பரமரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திர தாஸ் பரமஹம்சிடம் கேட்டபோது,அதை நான் இப்போது சொல்ல மாட்டேன் என்று கூறிவிட்டார்.
அந்தத் தூண்களாவது எங்கே இருக்கிறது என்று சொல்லுங்களேன் என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதையும்சொல்ல பரமஹம்ஸ் மறுத்து விட்டார்.
அதைப் பற்றிய விவரங்களைச் சொன்னால் எதிரிகள் எச்சரிக்கையாகி விடுவார்கள். அதனால் அந்தத் தூண் பற்றியஎந்த விவரத்தையும் நான் சொல்ல மாட்டேன். நாளை நாங்கள் அந்தத் தூணை எங்கிருந்து கொண்டு வருவோம்என்று நீங்களே நேரில் பார்க்கத்தானே போகிறீர்கள் என்றும் பரமஹம்ஸ் கூறினார்.
ஆனாலும் தூண் பற்றிய சில விவரங்களை விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) அமைப்பைச் சேர்ந்த சிலர்தெரிவித்தனர்.
சரியாக ஐந்து அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட அந்தத் தூண், ஆறு அங்குல தடிமன் கொண்டுஇருக்கும் என்று கூறப்படுகிறது.
தூண்கள் தயாரிக்கப்படும் "காரியசாலை"யும் (வொர்க் ஷாப்) வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதாகத்தெரிகிறது. தற்போது எங்கு அந்தத் தூண்கள் தயார் செய்யப்படுகின்றன என்றும் யாருக்கும் தெரியவில்லை.
இதனால்தான் அந்தத் தூண் எங்கிருந்து கொண்டுவரப்பட்டு, எங்கு வைத்து தானமாக வழங்கப்படும் என்றுவெளியில் யாருக்குமே தெரியாமல் உள்ளது.
அந்தத் தூணுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, மார்ச் 15ம் தேதி (நாளை) கட்டாயம் வெளியே கொண்டுவருவோம், அப்போது பார்த்துக் கொள்ளுங்கள் என்று வி.எச்.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications