திண்டுக்கல் மார்க்கெட்டில் தீ: ரூ.1 கோடி சேதம்
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் உள்ள காந்தி மார்க்கெட்டில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட பயங்கரமானதீவிபத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான 300 கடைகள் எரிந்து சாம்பலாயின.
திண்டுக்கல்லின் மையப் பகுதியில் காந்தி மார்க்கெட் உள்ளது. மிகவும் பிரபலான இந்த மார்க்கெட்டில் சுமார் 400கடைகள் உள்ளன.
இன்று அதிகாலை சுமார் 2.30 மணிக்கு இந்த மார்க்கெட்டில் திடீரென்று தீப்பிடித்தது. அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் நேரமானதால், தீப்பிடித்ததை முதலில் யாரும் பார்க்கவில்லை.
இதையடுத்து மளமளவென்று பரவிய தீ, அங்கிருந்த 300க்கும் மேற்பட்ட கடைகளை எரித்து சாம்பலாக்கி விட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயைஅணைத்தனர்.
எப்படி தீப்பிடித்தது என்று இன்னும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்தத் தீவிபத்தில் கடைகளை இழந்தவர்களுக்கு உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றுகோரி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே சுமார் 400 கடை உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டம்நடத்தினர்.
இதைக் கேள்விப்பட்டு, விரைந்து வந்த போலீசார் அவர்களைச் சமாதானப் படுத்தியதையடுத்து, சாலை மறியல்கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications