பழிவாங்குகிறார் ஜெயலலிதா: பா.ஜ.க. கருத்து
சென்னை:
திமுக மீது ஜெயலலிதா பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளாக பா.ஜ.க. கூறியுள்ளது.
பொன்முடி உள்ளிட்ட திமுக தலைவர்களின் வீடுகளில் ரெய்ட் நடத்தப்பட்டு வருவது குறித்து, தமிழக பா.ஜ.க.பொதுச் செயலாளரும் கருணாநிதிக்கு நெருக்கமானவருமான இல.கணேசன் கூறுகையில்,
திமுக மட்டுமல்ல தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள எந்தக் கட்சியினர் மீதும் ஜெயலலிதாநடவடிக்கை எடுத்தாலும் அதை எதிர்கொள்ளும் திறமும் பலமும் இந்தக் கூட்டணிக்கு உண்டு.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா மீது பழி வாங்கும் முறையில் செயல்படவில்லை. முறையாகநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் தான் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.
ஆனால், ஜெயலலிதா அரசு திமுக மீது அடாவடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைச் சமாளிக்கும் திறன்பொன்முடிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த திமுகவுக்கும் உண்டு.
திட்டமிட்டு திமுக தலைவர்கள் மீது ஜெயலிலதா நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது என்றார்.












Click it and Unblock the Notifications