திண்டுக்கல் அரசு மருத்தவமனை ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவமனை ஊழியர்கள் திடீரென்று இன்று (திங்கள்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அக்கரைப்பட்டியைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் ஞாயிற்றுக்கிழமைசிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
தகராறில் ஈடுபட்ட இரண்டு மருத்துவமனை ஊழியர்களை ஜெயபால் தாக்கினார். இதையடுத்து மருத்துவமனைஊழியர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். ஆனால் ஜெயபால் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஜெயபாலைக் கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
இதையடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவமனை ஊழியர்கள் அறிவித்தனர்.
இதனால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் யாருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதையடுத்து,தங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் படி கோரி, நோயாளிகளும் அவர்களுடைய உறவினர்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications