அயோத்தியில் பாதுகாப்பைக் குறைக்க காஞ்சி சுவாமிகள் கோரிக்கை
காஞ்சிபுரம்:
அயோத்தியில் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று காஞ்சி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயேந்திர சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில் இப்போது பதற்றமான சூழ்நிலை இல்லை. எனவே அங்கு மிகக் கடுமையான பாதுகாப்பை கைவிடவேண்டும்.
அயோத்தி பூஜை தினத்திற்கு முன்பாக இருந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வைத்துக் கொள்ளலாம்அல்லது சற்றே கூடுதலான பாதுகாப்பை மேற்கொள்ளலாம்.
அதை விடுத்து மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பது அயோத்தி பிரச்சினையைமேலும் சிக்கலாக்கும்.
அயோத்தியில் தூண் தானம் வழங்கும் நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்தது சந்தோஷத்தைத் தருகிறது. வி.எச்.பி.தலைவர் அசோக் சிங்கால் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று ஜெயேந்திரசுவாமிகள் கூறினார்.












Click it and Unblock the Notifications