ஜூலை 15ல் காங்கிரசுடன் தமாகா இணையும்: இளங்கோவன் தகவல்
சென்னை:
காமராஜர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா தொடங்கும் ஜூலை 15ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சியில் தமாகாஉறுப்பினர்கள் இணையத் தொடங்குவார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று(திங்கள்கிழமை) கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
காமராஜர் பிறந்தநாள் நூற்றாண்டு விழா வரும் ஜூலை 15ம் தேதி தொடங்கவுள்ளது. அன்றைய தினத்திலிருந்தேதமாகாவினர் அனைவரும் காங்கிரஸ் கட்சியில் இணையத் தொடங்குவார்கள்.
அனைத்து தமாகாவினரும் காங்கிரசில் சேர்ந்த பிறகு, தமிழக காங்கிரசுக்குப் புதிய தலைவரை அன்னை சோனியாகாந்தி தேர்ந்தெடுத்தால், அதைச் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன் என்றார் இளங்கோவன்.
வாசன் மழுப்பல்:
இதற்கிடையே இளங்கோவன் கூறியது பற்றி தமாகா தலைவர் வாசனிடம் நிருபர்கள் கேட்டபோது,
காங்கிரசாரும் நாங்களும் ஒன்றாக இணைந்தே மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பது அனைவருக்கும்தெரிந்த விஷயம்.
இரு கட்சிகளும் ஆரோக்கியமான அரசியலை நடத்தி வருகிறோம். ஒரே எண்ணம், ஒரே நோக்கத்துடன்தான்செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று மழுப்பலாகப் பதிலளித்தார் வாசன்.












Click it and Unblock the Notifications