ராஜ்யசபா தேர்தல்: வாசன் உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமாகா தலைவர் ஜி.கே. வாசன் உள்பட 6 பேர் தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ராஜ்யசபா உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிவுற்றது. இதனால் அந்தக் காலி இடங்களைநிரப்புவதற்காக வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

தமாகா சார்பில் வாசன், திமுக சார்பில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அதிமுக சார்பில் ஆண்டிப்பட்டி முன்னாள்எம்.எல்.ஏவான தங்க தமிழ்செல்வன், வழக்கறிஞர் ஜோதி, சையது கான் மற்றும் சீ. பெருமாள் ஆகிய 6 பேர்மனுத்தாக்கல் செய்தனர்.

இவர்களைத் தவிர மேலும் 3 பேர் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அந்த 3 பேருக்கும் எந்தஎம்.எல்.ஏ.வும் ஆதரவளிக்காததாலும் அவர்கள் முன்பணம் (டெபாசிட்) கட்டாததாலும் அவர்கள் மனுக்கள்தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து மற்ற 6 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியானது.

இந்நிலையில் இன்றுடன் (திங்கள்கிழமை) மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ளும் தேதி முடிவடைந்தது.

இதைத் தொடர்ந்து வாசன் உட்பட 6 பேரும் ராஜ்யசபா எம்.பிக்களாகப் போட்டின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்தல் அதிகாரி ராஜாராமன் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+