செருப்பு தந்தால் சொத்து தருவீர்களா? - கருணாநிதிக்கு பொன்னையன் சவால்
சென்னை:
செருப்புகளுக்குப் பதில் சொத்துக்களை தருவீர்களா என்று கருணாநிதிக்கு பதிலடி கொடுத்துள்ளார் தமிழக நிதிஅமைச்சர் பொன்னையன்.
இதுதொடர்பாக பொன்னையன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட செருப்புகளுக்கு, திமுக அமைச்சர்கள் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்டசொத்துக்கள் ஈடாகுமா என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளார்.
திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த சோதனையின்போது 700 ஜோடி செருப்புகளைக் கைப்பற்றியதாக திமுக அரசுவிளம்பரம் செய்தது. ஆனால் ஒரு ஜோடி செருப்பைக் கூட கோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்யவில்லை.
அந்த 700 ஜோடி செருப்புகளை நாங்கள் கருணாநிதியிடம் கொடுக்கிறோம். அதற்குப் பதிலாக முன்னாள்அமைச்சர்களின் சொத்துக்களைத் தர அவர் தயாரா?
திமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் அமைச்சர்கள் செய்துள்ள ஊழல்களை அறிந்து கொள்ள கருணாநிதி அவசரம்காட்ட வேண்டாம். லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இப்போதுதான் விசாரணையைத் துவக்கியுள்ளனர்.
விசாரணைக்குப் பிறகு அவருக்கு முழு விவரம் தெரிய வரும். அதுவரை அவர் பொறுமை காக்க வேண்டும் என்றுஅவ்வறிக்கையில் கூறியுள்ளார் பொன்னையன்.












Click it and Unblock the Notifications