லண்டன் ஓட்டல் வழக்கு: மொழிபெயர்ப்பு கோரி சசிகலா புது மனு
சென்னை:
அதிகாரப்பூர்வமான மொழிப் பெயர்ப்பாளர்களை வைத்து, லண்டன் ஓட்டல் வழக்கு தொடர்பான ஆவணங்களைமொழி பெயர்க்க உத்தரவிட வேண்டும் என்று சசிகலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
லண்டனில் நட்சத்திர ஓட்டலை வாங்கி விற்றதன் மூலம் ரூ.43 கோடி சொத்துக்கள் சேர்த்ததாக முதல்வர்ஜெயலலிதா, தினகரன் எம்.பி., சசிகலா, இளவரசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சமீபத்தில் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து முதலாவது தனி நீதிமன்றத்துக்குமாற்றப்பட்டது. இந்த வழக்கு ஆவணங்களை தமிழில் வழங்கக் கோரி சசிகலா, இளவரசி ஆகியோர் மனுத்தாக்கல்செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகபெருமாள் ஆதித்தன், அவர்களுக்கு தமிழில் ஆவணங்களை மொழிபெயர்த்துக் கொடுக்க உத்தரவிட்டார். தற்போது ஆவணங்களை தமிழில் மொழி பெயர்க்கும் பணி மும்முரமாகநடந்து வருகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை சசிகலா தரப்பில் முதலாவது தனிநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
ஆவணங்களை மொழிபெயர்க்கும் பணியில் 12 பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த 12 பேரில் யாரும் யாரும்அதிகாரப்பூர்வமான மொழி பெயர்ப்பாளர்கள் இல்லை.
எனவே தகுதி வாய்ந்த, அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ள மொழி பெயர்ப்பாளர்களைக் கொண்டு, வழக்குதொடர்பான ஆவணங்களை மொழி பெயர்க்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு மீதான உத்தரவை இன்று (செவ்வாய்க்கிழமை) பிறப்பிப்பதாக நீதிபதி ஆறுமுகபெருமாள் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications