நெய்வேலி நிறுவனம் தனியார் மயமாகாது: வாஜ்பாய் உறுதி - ஸ்டிரைக் வாபஸ்
டெல்லி:
நெய்வேலி அனல்மின் நிறுவனம் (என்.எல்.சி.) தனியார் மயமாகாது என்று பிரதமர் வாஜ்பாய்உறுதியளித்ததையடுத்து, அந்நிறுவன ஊழியர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
இப்பிரச்சனை குறித்து அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து அனுப்பிய கோரிக்கை மனுவை நேற்று(புதன்கிழமை) இரவு வாஜ்பாயிடம் வழங்கி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவருடன் ஆலோசனைநடத்தினார்.
தனியார் மயமாக்கப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துக் கூறிய வைகோ, உங்கள் ஆட்சிக்காலத்தின்போது இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்கும் தவறு நடந்துவிடக் கூடாது என்றும் வாஜ்பாயிடம்தெரிவித்தார்.
இதையடுத்து என்.எல்.சி. நிறுவனம் தனியார் மயமாக்கப்படாது என்று வைகோவிடம் வாஜ்பாய் உறுதியளித்தார்.
வாஜ்பாயின் இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, நெய்வேலியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதொழிற்சங்கங்கள் புதன்கிழமை இரவு தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
இதற்கிடையே தொழிற்சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்த என்.எல்.சி. நிறுவனத் தலைவர் சஹாய், பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் கடலூர் மாவட்ட கலெக்டர் தங்கசுவாமியும் கலந்துகொண்டார்.
இந்தப் பேச்சுவார்த்தையும் வெற்றிகரமாக முடியவே, ஸ்டிரைக் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாகஅறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்றைய இரவு ஷிப்டுக்கான பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத்திரும்ப, என்.எல்.சி. நிறுவனத்தில் மின் உற்பத்தி முழு வீச்சில் மீண்டும் தொடங்கியது.
இதனால் பெரும் மின் தடை பாதிப்பிலிருந்து தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து தென்னிந்திய மாநிலங்களும்தப்பித்தன.












Click it and Unblock the Notifications