இன்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் எடுக்கலாம் !
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள 7 ரயில்வே கோட்டங்களையும் மேம்படுத்துவதற்காக ரயில்வே அமைச்சகம் ரூ.32 கோடிநிதியை ஒதுக்கியுள்ளதாக தென்னக ரயில்வேயின் வணிகப் பிரிவு தலைமை மேலாளர் தியாகராஜன் கூறியுள்ளார்.
சேலம் ரயில் நிலையத்தில் புதிய தகவல் மையத்த்ை துவக்கி வைத்து தியாகராஜன் பேசுகையில்,
தென்னக ரயில்வேயில் பயணச் சீட்டு முன்பதிவு வசதி விரைவில் இன்டர்நெட் மூலம் மேற்கொள்ளப்படும்.
பரீட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த முறை வெற்றி பெற்றால் அனைத்து ரயில்வேயிலும்விவுபடுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள 7 ரயில்வே கோட்டங்களையும் மேம்படுத்த ரயில்வே அமைச்சகம் ரூ.32 கோடி நிதியைஒதுக்கியுள்ளது.
ரயில்வே நிலையங்களில் உள்ள கேன்டீன்களை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து ரயில்வே துறை பரிசீலித்துவருகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications