கன்னியாகுமரி அருகே ரூ.50 லட்சத்துடன் நிதி நிறுவன அதிபர் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்த ஒருவர் ரூ.50 லட்சம் மற்றும் நகைகளுடன் தலைமறைவானதையடுத்து, அவருடைய சொத்துக்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ம் திங்கள் சந்தையில் டேவிட் ஷெரோன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். ஷெரோனிடம் நூற்றுக்கணக்கானமக்கள் சீட்டுப் பணம் கட்டியிருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஷெரோன் திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அவரிடம் பணம் கட்டிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுமார் ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளுடன் ஷெரோன் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள்போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து ஷெரோனின் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications