திண்டிவனம் அருகே லாரிகள் பயங்கர மோதல்: 7 கூலித் தொழிலாளர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி வந்து பயங்கரமாக மோதியதில் 7 கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டிவனம் அருகே உள்ள செ. குன்னத்தூரிலிருந்து செங்கல் சூளை வேலைக்காக 25 குடும்பங்களைச் சேர்ந்த 40கூலித் தொழிலாளர்கள் சென்னைக்கு ஒரு லாரியில் சென்று கொண்டிருந்தனர்.

மற்றொரு லாரி திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்குச் சென்று கொண்டிருக்கும் வழியில் திண்டிவனம்அருகே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது இந்த லாரி மீது கூலித் தொழிலாளர்கள் வந்த லாரி வேகமாக வந்து பயங்கரமாக மோதியது.

இவ்விபத்தில் சமீதா (17), பரமசிவம் (40), ஜொல்லி (27), சாவித்திரி (23), தென்னரசு (10) மற்றும் திலகம் (18)ஆகிய 6 கூலித் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சின்னபொண்ணு (23) என்ற பெண் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல்உயிரிழந்தார்.

இவ்விபத்தில் காயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+