அணு ஆயுதப் போர் வராது: வாஜ்பாய் உறுதி
சிம்லா:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் வராது என்று பிரதமர் வாஜ்பாய் உறுதியாகக்கூறியுள்ளார்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தற்போது நிலவி வரும் பதற்றம், பெரும் அணு ஆயுதப் போராக வெடிக்கும்என்று சமீபத்தில் அமெரிக்காவின் புலனாய்வுத்துறையான சி.ஐ.ஏ. எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) சிம்லாவில் நிருபர்களிடம் வாஜ்பாய் கூறியதாவது:
பாகிஸ்தானுடன் போர் உருவாகும் பட்சத்தில் இந்தியா முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்றுஏற்கனவே கூறியுள்ளேன்.
பாகிஸ்தானும் இதேபோன்ற கருத்தைக் கூறியுள்ளதால் அணு ஆயுதப் போரெல்லாம் வரும் என்று எனக்குத்தோன்றவில்லை.
ஆனாலும் எல்லையிலிருந்து இப்போதைக்கு இந்தியப் படைகளை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் இல்லை.
காஷ்மீர் எல்லையில் இப்போதும்கூட தினமும் ஏதாவது மோதலும் வன்முறையும் நடந்து கொண்டுதான் உள்ளது.மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொண்டால் மட்டுமே படைகளை வாபஸ்பெறுவது பற்றியோ அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றியோ சிந்திக்க முடியும் என்று வாஜ்பாய்கூறினார்.












Click it and Unblock the Notifications